Sunday, May 1, 2016

கழக உறுப்பினர்கள் கூட்டம் 24-04-2016

                                 காந்தியடிகள் நற்பணிக் கழகத்தின் உறுப்பினர்கள் கூட்டம் 24-04-2016 அன்று மாலை 6 மணிக்கு நடைபெற்றது. கூட்டத்திற்கு அமைப்பாளர் கு. பாலசுப்ரமணியன் தலைமை தாங்கி பேசினார். ஆசிரியர் க. ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

                                 இலக்கிய வட்ட கூட்டங்களை திரும்ப நடத்துதல், , புத்தக திறனாய்வு கூட்டம் நடத்துதல், போட்டித் தேர்வுகளுக்கான வகுப்புகள் நடத்துதல் , மாதத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஏதேனும் ஒரு கிராமப்பகுதிக்கு சென்று அம்மக்களின் சமூக முன்னேற்றத்திற்கான தேவைகளை அறிதல் , அத்தேவைகளை நிறைவேற்ற முயற்சித்தல்  போன்ற பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. கூட்ட முடிவில் கழக ஆசிரியை வே. மேகலா நன்றி கூறினார்.





 

No comments:

Post a Comment