Wednesday, January 15, 2014

விஜய் தொலைக்காட்சியின் "நீயா நானா" விருது

விஜய் தொலைக்காட்சியின் "நீயா நானா" நிகழ்ச்சியின் சார்பில் 2013ம் ஆண்டுக்கான பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன. நமது காந்தியடிகள் நற்பணிக் கழகத்தின் அமைப்பாளர் கு.பாலசுப்பிரமணியன் அவர்களுக்கு "2013ம் ஆண்டின் சிறந்த நம்பிக்கையாளர்" விருது வழங்கப்பட்டது. அமைப்பாளரின் சார்பில் அவரது மனைவி ஞானம், மகன் குருபிரசாத் , சகோதரர் சுந்தரமூர்த்தி ஆகியோர் விருதை பெற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சி 1-1-2014 அன்று விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.

சென்னை ராமகிருஷ்ண மடத்தின் பாராட்டு

எண்ணங்களின் சங்கமம் அமைப்பின் 9-வது ஆண்டு விழா 15--12-2013 ஞாயிறு அன்று சென்னை ராமகிருஷ்ணர் மடம், மயிலாப்பூரில் நடைபெற்றது. விழாவில் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவங்களின் பணிகளை பாராட்டி விருதுகள் வழங்கப்பட்டன. மடத்தின் தலைவர் கவுதமானந்தர் விருதுகளை வழங்கி பாராட்டி பேசினார். ஜெ.பிரபாகர், NDSO அமைப்பின் தலைவர் அழகர் ராமானுஜம் மற்றும் உறுப்பினர்கள் , பல்வேறு தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர். நமது காந்தியடிகள் நற்பணிக் கழகத்தின் அமைப்பாளர் கு.பாலசுப்ரமணியன் அவர்களுக்கும் விருது வழங்கப்பட்டது.