விஜய் தொலைக்காட்சியின் "நீயா நானா" நிகழ்ச்சியின் சார்பில் 2013ம் ஆண்டுக்கான பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன. நமது காந்தியடிகள் நற்பணிக் கழகத்தின் அமைப்பாளர் கு.பாலசுப்பிரமணியன் அவர்களுக்கு "2013ம் ஆண்டின் சிறந்த நம்பிக்கையாளர்" விருது வழங்கப்பட்டது. அமைப்பாளரின் சார்பில் அவரது மனைவி ஞானம், மகன் குருபிரசாத் , சகோதரர் சுந்தரமூர்த்தி ஆகியோர் விருதை பெற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சி 1-1-2014 அன்று விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.
We are an organisation driven by GANDHIAN philosophy involved in providing free education since 1975. We have around 500 students and 25 volunteer-teachers who handle all classes without taking a single pie. Our financial sources are voluntary contributions from students, alumni and other generous noble souls. We give utmost importance to discipline and being guided by Gandhian principles, We hope to light a lamp of literacy, which though small, drives away darkness of ignorance.
Wednesday, January 15, 2014
விஜய் தொலைக்காட்சியின் "நீயா நானா" விருது
சென்னை ராமகிருஷ்ண மடத்தின் பாராட்டு
எண்ணங்களின் சங்கமம் அமைப்பின் 9-வது ஆண்டு விழா 15--12-2013 ஞாயிறு அன்று சென்னை ராமகிருஷ்ணர் மடம், மயிலாப்பூரில் நடைபெற்றது.
விழாவில் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவங்களின் பணிகளை பாராட்டி விருதுகள் வழங்கப்பட்டன.
மடத்தின் தலைவர் கவுதமானந்தர் விருதுகளை வழங்கி பாராட்டி பேசினார். ஜெ.பிரபாகர், NDSO அமைப்பின் தலைவர் அழகர் ராமானுஜம் மற்றும் உறுப்பினர்கள் , பல்வேறு தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர்.
நமது காந்தியடிகள் நற்பணிக் கழகத்தின் அமைப்பாளர் கு.பாலசுப்ரமணியன் அவர்களுக்கும் விருது வழங்கப்பட்டது.
Saturday, September 7, 2013
புதிய தலைமுறை கல்வி இதழில் நமது கழகம் பற்றி......
புதிய தலைமுறை கல்வி - 26-08-2013 - இதழில் நமது கழகம் பற்றிய கட்டுரை வெளியாகியுள்ளது.
http://www.puthiyathalaimurai.com/this-week/2017
கல்வி தரும் காந்தியடிகள் நற்பணிக் கழகம்!
சு.வீரமணி (புதிய தலைமுறை பயிற்சி பத்திரிகையாளர்)
கும்பகோணத்தில் கடந்த 36 ஆண்டுகளாக ஏழை மாணவர்களுக்குக் கல்வி கற்பிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது காந்தியடிகள் நற்பணிக் கழகம்
பண வசதி இல்லை என்ற ஒரே காரணத்துக்காக ஒருவரின் படிப்பு பாதியிலேயே தடைபட்டு விடக்கூடாது என்பதை தாரக மந்திரமாகக்கொண்டு செயல்படுகிறது, கும்பகோணத்தைச் சேர்ந்த காந்தியடிகள் நற்பணிக் கழகம். இந்த அமைப்பின் மூலம் 36 ஆண்டுகளாக ஏழைகளுக்கு இலவசமாக கல்விச் சேவை புரிந்து வருகிறார் பாலசுப்ரமணியன். இவர்களது சேவையைப் பாராட்டி இவர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார் முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய்.
“நாங்கள் ஐந்து பேர் இணைந்து பத்தாம் வகுப்பில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு, இலவசமாக பாடம் எடுப்பதற்காக, 1975-ஆம் ஆண்டு ‘காந்தியடிகள் நற்பணிக் கழகம்’ என்ற அமைப்பைத் தொடங்கினோம். முதல் ஆண்டே நாங்கள் பயிற்றுவித்த 50 மாணவர்களும் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றனர்” என்று விவரிக்கிறார் இக்கழகத்தின் நிறுவனரான பாலசுப்ரமணியன்.
நெசவாளர்கள் குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள், வறுமை காரணமாக படிப்பைத் தொடர முடியாமல் பாதியிலேயே விட்டு விடுவதை அறிந்து, அந்த மாணவர்களைத் தேடிப் பிடித்து காலை, மாலை நேரங்களில் அவர்களுக்கு பாடம் சொல்லித் தந்து அவர்களைப் படிக்க வைத்திருக்கிறார்கள். குடும்ப வறுமை காரணமாக சிறுவயதிலேயே கொத்தனார், பெயிண்டர் என்ற பலவிதமான வேலைகளுக்குச் சென்றவர்களுக்கும் கல்வி கற்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தனர். அத்துடன், மாணவர்களுக்கு ஹிந்தி வகுப்புகளையும் எடுத்து வருகிறார்கள்.
“தாராசுரம் பொன்னியம்மன் கோயில் தெரு என்னும் பகுதி சாராயம் காய்ச்சுபவர்களும், குடிகாரர்களும் நிறைந்த பகுதியாக முன்பு இருந்தது. அந்தப் பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்களின் உதவியுடன் அங்கு ஒரு காந்தி சிலையை வைத்தோம். அந்தப் பகுதி இளைஞர்களுக்கு கல்வியும், நீதிபோதனை வகுப்புகளும் எடுத்தோம். அதன் விளைவாக அந்தப் பகுதியே இன்று மாறிப்போய் உள்ளது. அந்தப் பகுதியிலிருந்து வந்து எங்களிடம் கல்வி கற்ற இளைஞர்கள் இன்று மிக உயர்ந்த பதவிகளில் இருக்கிறார்கள். இன்று அந்த கிராமமே மதுப்பழக்கமற்ற பகுதியாக மாறியுள்ளது” என்கிறார் பாலசுப்ரமணியன்.
2003-ஆம் ஆண்டுவரை வாடகைக் கட்டடத்தில்தான் இக்கழகம் இயங்கி வந்தது. 2003-இல் முன்னாள் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் இணைந்து இப்போது இயங்கிவரும் கட்டடத்தை கட்டித் தந்துள்ளனர். 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கற்றுத் தருவதற்காக ஆரம்பிக்கப்பட்ட இவர்களின் கல்விச் சேவை, பின்னர் பிளஸ் டூ மாணவர்களுக்கும் விரிவடைந்தது. இவர்களது கழகத்தைப் பொருத்தவரை கல்விக்கு மட்டுமல்லாது நீதிபோதனை வகுப்புகள், ஒழுக்கம், நேரம் தவறாமை ஆகியவற்றையும் இணைத்தே மாணவர்களுக்கு சொல்லித் தருகிறார்கள். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள், வங்கிப் பணியாளர் தேர்வுகள் போன்ற போட்டித் தேர்வுகளை எழுதும் ஏழை மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறார்கள்.மேற்படிப்பு படிப்பதற்கு வசதியில்லாத மாணவர்களுக்கு ரோட்டரி கிளப் போன்ற அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்களின் மூலமாக உதவிகளைப் பெற்றுத் தருகிறார்கள்.
“இங்கு வந்து வகுப்பெடுப்பவர்கள் அனைவருமே எங்கள் கழகத்தில் படித்த முன்னாள் மாணவர்கள்தான். எனவே அவர்கள் எல்லோருமே எந்தவிதப் பிரதிபலனையும் பாராமல் கல்விச் சேவை புரிகின்றனர். அதுபோல மாணவர்களிடம் இருந்து நாங்கள் எந்தக் கட்டணமும் வசூலிப்பதில்லை” என்கிறார் பாலசுப்ரமணியன்.
“நான் இரண்டாம் வகுப்பு வரைதான் படித்திருந்தேன். குடும்ப வறுமை காரணமாக என் வீட்டில் என்னை தச்சு வேலைக்கு அனுப்பிவிட்டனர். கல்வி வாசமே இல்லாமல் இருந்த என்னை என் அண்ணன்தான் எனது 20-ஆவது வயதில் இந்தக் கழகத்தில் சேர்த்து விட்டார். நான் இப்போது பி.ஏ. படித்துள்ளேன். ஹிந்தி ஆசிரியராகவும் உள்ளேன். நான் குழந்தைத் தொழிலாளியாக இருந்து வேலை பார்த்த தறித் தொழிலை இன்று நானே சொந்தத் தொழிலாகச் செய்து, தமிழகத்தின் முன்னணி நிறுவனங்களுக்கெல்லாம் எனது துணிகளை அனுப்பும் அளவுக்கு உயர்ந்திருக்கிறேன் என்றால் அதற்குக் காரணம் இந்தக் கழகம் தந்த கல்விதான். வெறும் கல்லாக இருந்த என்னை இந்தக் கழகம்தான் சிற்பமாக மாற்றியது.” என்கிறார் சுப்ரமணியன்.
“போட்டித் தேர்வுகளுக்கு இந்தக் கழகத்தின் மூலம்தான் பயிற்சி பெற்று வெற்றி பெற்றேன். இப்போது தஞ்சாவூர், வல்லத்திலுள்ள தமிழ்நாடு குடும்ப நலத் துறையில் அலுவலராகப் பணிபுரிகிறேன். இங்கு படிக்கும் 10 மற்றும் பிளஸ் டூ மாணவர்களுக்கு கணித வகுப்புகளை எடுத்து வருகிறேன். மற்ற வேலைகள் எப்படியிருந்தபோதும் ஏழைகளுக்கு கல்வி அளிக்கும் ஆத்மதிருப்தி வேறு எந்த வேலையிலும் கிடைக்காது.’ என்கிறார் செல்வம்.
“நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவன். இந்தக் கழகத்தில்தான் ஹிந்தி மற்றும் ஆளுமை பயிற்சிகளைப் பெற்றேன். இப்போது நான் ஒரு தனியார் பள்ளியில் வேதியியல் ஆசிரியராக உள்ளேன். தினமும் இங்கு வந்து 10 மற்றும் பிளஸ் டூ வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கிலப் பாட வகுப்புகளை எடுத்து வருகிறேன்.” என்கிறார் தனராமன்.
இந்த அமைப்பைத் தொடங்கும் போது பாலசுப்பிரமணியனுடன் இருந்த நண்பர்கள் அனைவரும் அவரவர் ஊர்களுக்குத் திரும்பிச் சென்றுவிட, இவர் மட்டும் விடாமல் தொடர்ந்து காந்தியடிகள் நற்பணிக் கழகத்தை நடத்தி வருகிறார். வாழ்க்கையை நடத்த மளிகைக் கடை நடத்தி வரும் இவர், படித்தது எட்டாம் வகுப்பு வரைதான். ஆனால் விடா முயற்சி காரணமாக இரண்டு எம்ஏ பட்டங்களைப் பெற்றுள்ளார்.
Wednesday, May 29, 2013
Wednesday, April 24, 2013
”புதிய தலைமுறை” தொலைக்காட்சியில் நமது காந்தியடிகள் நற்பணிக் கழகம் பற்றிய செய்தி
கற்க கசடற 04-03-2013
http://puthiyathalaimurai.tv/video-archive?vid=karka&pres=2013&month=apr&paging=4&video=KAR-20130404SEG2
"காலணி வடிவமைப்பு மற்றும் வளர்ச்சி நிறுவனம் வழங்கும் பட்டப் படிப்புகள்.., தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற உயர் கல்வி குறித்த மானியக் கோரிக்கை மீதான விவாதம் குறித்த தகவல்கள்.., National Power Training Institute வழங்கும் முதுநிலை பட்டயப் படிப்புகள்.., ஏழை மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச கல்வி சேவை... உள்ளிட்ட பல செய்திகளை இன்றைய கற்க கசடற நிகழ்ச்சியில் பார்க்க இருக்கிறோம்."
Friday, April 5, 2013
”புதிய தலைமுறை” தொலைக்காட்சியில் நமது காந்தியடிகள் நற்பணிக் கழகம் பற்றிய செய்தி
38 ஆண்டுகளாக இலவச கல்வி வழங்கும் காந்தியடிகள் நற்பணி கழகம்
![]() |
| நன்றி |
பதிவு செய்த நாள் - ஏப்ரல் 04, 2013, 9:07:17PM
கல்விக்கு பணம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதற்காக மாணவர்களுக்கு இலவசமாக கல்வி கற்பித்து வருகிறார் கும்பகோணத்தைச் சேர்ந்த ஒருவர். காந்தியடிகள் நற்பணி கழகம் என்ற பெயரில் வழங்கப்படும் சிறப்பான கல்விச் சேவை குறித்த செய்தி தொகுப்பு.
குடும்பத்தின் பொருளாதார நிலையே, மாணவனின் கல்வித் தகுதியை தீர்மானிக்கும் நிலை பல காலமாகவே இருந்து வருகிறது. மாணவர்களின் படிப்பின் உயரத்தை பணம் தீர்மானிக்கக் கூடாது என்ற நோக்கில், கும்பகோணத்தைச் சேர்ந்த பாலசுப்ரமணியன் தனது 3 நண்பர்களுடன் இணைந்து, காந்தியடிகள் நற்பணி மன்றம் என்ற இலவச கல்வி மையத்தை உருவாக்கியுள்ளார். கடந்த 38 ஆண்டுகளாக, தன்னார்வலர்கள் மற்றும் இங்கேயே படித்து முடித்தவர்ளைக் கொண்டு, குடந்தையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கல்வி தாகத்தை போக்கியிருக்கிறது இந்த அமைப்பு.
1975-ஆம் ஆண்டு சிறிய வாடகைக் கூடத்தில் தொடங்கப்பட்டு, பொதுமக்களின் நன்கொடை உதவியுடன் 12 வகுப்பறைகள் கட்டப்பட்டு, இங்கு கல்விச் சேவை வழங்கப்பட்டு வருகிறது. இங்கு பணிபுரியும் ஆசிரியர்கள் ஏற்கெனவே இங்கு படித்து, அரசுப் பணி உள்ளிட்ட பணிகளில் சேர்ந்தவர்கள் என்பது கூடுதல் சிறப்பம்சம். தங்களுக்கு கிடைக்கும் ஓய்வு நேரத்தில் இங்கு வகுப்புகளை நடத்துவது மிகுந்த ஆத்ம திருப்தியை அளிப்பதாக தெரிவிக்கின்றனர் இவர்கள்.
மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை என்பதோடு இங்கு பயிற்றுவிக்கும் ஆசிரியர்களும் ஊதியம் பெறுவதில்லை என்பது இந்த அமைப்பின் சேவைக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. தங்கள் அமைப்பில் படித்தவர்கள் சமூக விழுமங்களை பின்பற்றுபவர்களாக அடிப்படைடையில் இருந்தே உருவாக்கப்படுகின்றனர் என்கின்றார் பாலசுப்ரமணியன்.
காந்தியடிகள் நற்பணிகழகத்தில் இந்தி வகுப்புகளும், போட்டித் தேர்வுகளை எதிர் கொள்ள பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. மனமிருந்தால் மார்க்கமுண்டு என்பார்கள், பாலசுப்ரமணியன் போன்ற மனிதர்கள் அதிகரித்தால் அனைவருக்கும் இலவசக் கல்வி உண்டு என்பது நிச்சயம்.
Friday, March 22, 2013
Wednesday, December 26, 2012
Wednesday, August 15, 2012
சுதந்திர தின விழா கொண்டாட்டம் - 15 - 08 - 2012
குடந்தை காளசந்தி கட்டளைத் தெருவில் அமைந்துள்ள இலவச கல்வி நிறுவனமான காந்தியடிகள் நற்பணிக் கழகத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கழக அமைப்பாளர் கு. பாலசுப்ரமணியன் தலைமை ஏற்றார். கழக ஆசிரியர் இராதாகிருஷ்ணன் வரவேற்றார். கலை விமர்சகர் தேணுகா தேசியக்கொடி ஏற்றி சிறப்புரை ஏற்றினார்.
![]() |
| ராஜூ, ராதாகிருஷ்ணன், தேனுகா, பாலுஜி |
![]() |
| தேனுகா, பாலுஜி, |
” சுதந்திரம் என்பது விருப்பம்போல இருப்பது அல்ல. சுதந்திரத்திற்கான உண்மையான அர்த்தம் கட்டுப்பாடுடன் இருத்தல் மற்றும் கட்டுப்பட்டு நடத்தல் ஆகும். சான்றோர்கள், நல்லவர்கள், நல்ல தலைவர்கள் போன்றோரின் வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டு நடக்கவேண்டும். காந்தி, நேரு, திலகர் போன்றோரின் வார்த்தைகளின்படி மக்கள் நடந்த காரணத்தால் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த்து. ஆனால் இன்றைய சுதந்திர இந்தியாவில் இளைய தலைமுறையினர் சுதந்திரம் என்ற பெயரில் யாருக்கும் கட்டுப்படாமல் மனம்போன போக்கில் அலைகின்றனர். போதையின் பாதையில் போகின்றனர், வழிகாட்ட நல்ல தலைவர்கள் இப்போது இல்லை. இளைஞர்கள் தங்களது வாழ்க்கை முறையினை மாற்றி சுயகட்டுப்பாடு, நல்ல கல்வி, ஒழுக்கம், நல்ல குறிக்கோள், நல்ல பாதை, போன்றவற்றோடு வாழ்க்கையினை அமைத்துக் கொண்டு முன்னேறினால் இந்தியா நிச்சயம் வல்லரசாக மாறி உலகிற்கே தலைமை ஏற்கும்.”
கழக ஆசிரியர்கள் செல்வம், குருபிரசாத், சோமசுதர்ஸன், புவனா, புஷ்பாதேவி, அறிவுக்கரசி, செல்லநாகலட்சுமி ஆகியோர். பங்கேற்றனர். கழக ஆசிரியர் ராஜீ நன்றி கூறினார்.
Friday, July 8, 2011
காந்தியடிகள் நற்பணிக் கழகம் in "www.thesundayindian.com"
www.thesundayindian.com/ta/story/கண்ணைத்-திறக்கும்-கல்விக்கூடம்/13/664/
கண்ணைத் திறக்கும் கல்விக்கூடம்
சுந்தரபுத்தன்
ஜூன் 30, 2011 11:34
கும்பகோணம் கும்பேஸ்வரன் தெருவுக்குப் பின்னே இருக்கிறது காலசந்தி கட்டளைத் தெரு. அதற்கு என்ன முக்கியத்துவம்? அங்குதான் பள்ளியை பாதியில் விட்டவர்கள், மழைக்குக்ல்கூட பள்ளியில் ஒதுங்காதவர்களுக்கான காந்தி நற்பணிக்கழக இலவசப் பள்ளி இருக்கிறது. எல்லோரும் வேலைகள் முடிந்து வீடு திரும்பும் நேரத்தில் பள்ளி தொடங்குகிறது. தினமும் அப்படித்தான்.
"என்னோட கிராமம் செம்பியன்மாதவி. சிறுவயதிலேயே கும்பகோணத்துக்கு வந்துவிட்டேன். குடும்பச் சூழல் காரணமாக படிக்க முடியவில்லை. அப்பாவின் மளிகைக் கடையில் வேலை பார்த்தேன். ஆனால் படிப்புமீதான ஆசை மட்டும் குறையாமல் இருந்தது. வேலை பார்த்துக்கொண்டே பொலிடிக்கல் சயன்ஸில் பி.ஏ. படித்தேன். பிறகு இந்தியில் எம்.ஏ., படித்துமுடித்தேன். அந்த நேரத்தில்தான் நம்மை மாதிரி படிக்காத ஏழை குழந்தைகளுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. என்னை மாதிரி சில நண்பர்களுடன் சேர்ந்து தொடங்கியதுதான் காந்தியடிகள் நற்பணிக் கழகம்" என்று சொல்லத் தொடங்குகிறார் ஒரு மாலை நேர வகுப்பில் பாடம் நடத்திக்கொண்டிருந்த கு. பாலசுப்ரமணியன். அவர்தான் பள்ளியின் நிறுவனர். முப்பது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சிறிய அறையில் முளைத்த கனவு அது.
காந்திய கொள்கைகளில் ஈடுபாடுள்ள அவர், ஒரு படிப்பகத்தில் ஐந்து நண்பர்களுடன் சேர்ந்து மாலை நேர இலவச வகுப்புகளை நடத்தினார். எஸ்எஸ்எல்சியில் தோல்வியடைந்தவர்கள் மீண்டும் படிக்க டுடோரியலில் அதிகமாக பணம் கேட்பார்கள். அதோடு ஒரு பாடத்தில் தோல்வி என்றால் எல்லா பாடங்களையும் எழுதவேண்டிய நிலையும் இருந்தது. அந்த காலகட்டத்தில் ஓர் அமுதசுரபி போல கு.பாலசுப்ரமணியனின் காந்தி நற்பணிக் கழகம் செயல்படத் தொடங்கியுள்ளது. "ஆரம்பத்தில் மாதாகோயில் தெருவில் முதியோர் கல்வி வகுப்புகளை நடத்தினேன். மக்களின் ஒத்துழைப்பு இ¢¢லை. பிறகுதான் பள்ளி மாணவர்களுக்கு இலவச இந்தி வகுப்புகளை நடத்தினோம். நல்ல வரவேற்பு. அதுதான் இன்று ஒரு பள்ளியாகவே உருவெடுத்திருக்கிறது. மாலையில் 6 மணிக்கு ஆரம்பித்து 10 மணிவரை வகுப்புகள் நடக்கும். காலையில் வகுப்புகள் உண்டு" என்கிறார்.
ஜெயப்பிரகாஷ் நாராயணின் பீகார் இயக்கத்தில் ஈடுபாடு கொண்ட அவர், மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கும்போது காந்திய சிந்தனைகளை சொல்லாமல் இருப்பதில்லை. வாழ்வில் எளிமையும் சேவை மனமும் ஊழலற்ற மனநிலையும்தான் முக்கிய கல்வியாக இருக்கமுடியும் என¢று நம்புகிறார். இவர்களது பணியைப் பார்த்த பனாரஸ் மஹால் ஜவுளிக்கடை அதிபர் தாமாக முன்வந்து வகுப்பு நடத்துவதற்கான அறைக்கு வாடகைப் பணம் கொடுத்து உதவியுள்ளார். இப்படி படிப்படியாக நடந்த இலவச வகுப்புகள் பற்றிய செய்தி நகரெங்கும் பரவ கோயில் நகரில் காந்தி நற்பணிக் கழகமும் நகரின் பெருமையாக மாறியிருக்கிறது. ஒரு பெரும் பொருளாதாரப் போராட்டத்துக்குப் பிறகு தற்போது சொந்த கட்டடத்தில் இயங்குகிறது.
இங்கு நேரடியாக எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு தேர்வெழுத படிப்பவர்கள் அதிகம். நெசவாளர் குடும்பங்களில் 'சீடா' போடும் பணிக்காக குழந்தைகளைப் பயன்படுத்துவது பழக்கம். அதனால் படிப்பு பாதியில் நிறுத்தப்படும் அல்லது பள்ளிக்கே அனுப்பமாட்டார்கள். மற்றும் சிறு வயதிலேயே வேலைக்கு அனுப்படும் ஏழைக் குழந்தைகள். இவர்கள்தான் இப்பள்ளியின் இலவச வகுப்புகளின் மாணவர்கள். இந்த மாணவர்களின ஆர்வத்தை சொல்லிமாளாது என்கிறார் அங்கு வகுப்பெடுக்கும் ஆசிரியர் ஐயப்பன். ஒரு தனியார் பள்ளியில் பணிபுரியும் இவரைப் போன்ற பலரும் மாலை நேரம் வகுப்புகளை ஊதியமில்லாமல் நடத்துகிறார்கள். "நாங்களும் இங்கதான் இந்தி படிச்சோம். நம்முடைய பங்களிப்பு ஏதாவது இருக்கவேண்டும் என்று நினைத்தோம். இருபது ஆண்டுகளாக வகுப்புகளை நடத்திவருகிறோம். எதையும் எதிர்பார்த்து செய்யவில்லை. எங்களுக்கு ஆத்மதிருப்தி கிடைக்கிறது. அதுவே போதும்" என்று சொல்கிறார் பாலவெங்கட மாணிக்கம், ஒரு தனியார் பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணிபுரிகிறார்.
இந்தப் பள்ளியில் 300 மாணவ மாணவிகள் இந்தி வகுப்பில் படிக்கிறார்கள். இளம் மனங்களில் காந்திய சிந்தனையைப் பரப்புவதில் ஆர்வம் கொண்டிருக்கிறார் கு.பாலசுப்ரமணியன். தாங்கள் பணிநேரம் போக ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்கள் தன்னிச்சையாக வந்து ஊதியம் பெறாமல் வகுப்பு நடத்துகிறார்கள். தேறமாட்டான் என்ற பெயரெடுத்த இளைஞர் சுப்ரமணி. காந்தியடிகள் நற்பணிக் கழகம்தான் தன்னை ஒரு மனிதனாக உயர்த்தியது என்று பெருமிதத்துடன் தசஇயிடம் அவர் பகிர்ந்துகொண்டார். "அஆவன்னாகூட தெரியாதவனா இருந்தான். அவங்கதான் என்னை கண்ணைத் திறந்தாங்க. நேரடியாக எட்டாம் வகுப்பை முடிச்சுட்டு இந்தியில பிஏவரைக்கும் படிச்சேன். இன்னைக்கு நான் எங்க ஜவுளிக்கடையில் கணக்கு எழுதறவனா இருக்கேன். இ¢ல்லைனா துணிக்கு சாயாம் போட்டுக்கிட்டு இருந்திருப்பேன்" என்கிறார்.
காந்தியடிகள் நற்பணிக் கழகத்தில் படித்து இன்று நல்ல வேலையில் இருக்கும் பலரும் உதவி செய்கிறார்கள். புதிய கட்டடம் கட்டுவதற்காக ஒரு மாணவர் தனிப்பட்ட முறையில் 9 ஆயிரம் ரூபாய் அனுப்பியதை பெருமையுடன் சொல்கிறார்கள். ஒரு இனிப்புக் கடையில் வேலைபார்த்த வெங்கட்ராகவன் பகுதி நேரத்தில் இப்பள்ளியில் படித்து நேரடியாக எட்டாம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார். பிறகு பத்தாம் வகுப்பில் 429 மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார். பள்ளியில் சேர்ந்து பனிரெண்டாம் வகுப்பில் படித்து தேறியிருக்கிறார். "நான் படிக்கிறேன் என்பது கனவு போல இருக்கிறது. இந்த நற்பணிக் கழகத்தால் கிடைத்த பரிசு அது. பிஏ சமூகவியல் படிக்கலாம் என்றிருக்கிறேன். வீட்டிலும் ஆதரவு காட்டுகிறார்கள். எனக்கு ஐஏஎஸ் ஆகவேணடும் என்பதுதான் ஒரே இலட்சியமாக இருக்கிறது" என்கிறார் வெங்கட்ராகவன்.
கும்பகோணத்தைச் சேர்ந்த கலை விமர்சகர் தேனுகா, ''குறைந்தபட்ச நிதி ஆதாரம்கூட இல்லாமல் இயங்கும் இப்பள்ளி ஓர் அதிசயம். எங்கள் ஊருக்கே பெருமை சேர்க்கும் அடையாளமாக மாறியிருக்கிறது'' என்கிறார். மற்றப் பள்ளிகளைப் போல அல்ல. இங்கு படித்தவர்கள் வேலைக்குச் சென்ற பின்பும்கூட மாலை வகுப்புகளை நடத்த ஆர்வத்துடன் வருகிறார்கள். நன்றிக்கடன்.
கண்ணைத் திறக்கும் கல்விக்கூடம்
சுந்தரபுத்தன்
ஜூன் 30, 2011 11:34
கும்பகோணம் கும்பேஸ்வரன் தெருவுக்குப் பின்னே இருக்கிறது காலசந்தி கட்டளைத் தெரு. அதற்கு என்ன முக்கியத்துவம்? அங்குதான் பள்ளியை பாதியில் விட்டவர்கள், மழைக்குக்ல்கூட பள்ளியில் ஒதுங்காதவர்களுக்கான காந்தி நற்பணிக்கழக இலவசப் பள்ளி இருக்கிறது. எல்லோரும் வேலைகள் முடிந்து வீடு திரும்பும் நேரத்தில் பள்ளி தொடங்குகிறது. தினமும் அப்படித்தான்.
"என்னோட கிராமம் செம்பியன்மாதவி. சிறுவயதிலேயே கும்பகோணத்துக்கு வந்துவிட்டேன். குடும்பச் சூழல் காரணமாக படிக்க முடியவில்லை. அப்பாவின் மளிகைக் கடையில் வேலை பார்த்தேன். ஆனால் படிப்புமீதான ஆசை மட்டும் குறையாமல் இருந்தது. வேலை பார்த்துக்கொண்டே பொலிடிக்கல் சயன்ஸில் பி.ஏ. படித்தேன். பிறகு இந்தியில் எம்.ஏ., படித்துமுடித்தேன். அந்த நேரத்தில்தான் நம்மை மாதிரி படிக்காத ஏழை குழந்தைகளுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. என்னை மாதிரி சில நண்பர்களுடன் சேர்ந்து தொடங்கியதுதான் காந்தியடிகள் நற்பணிக் கழகம்" என்று சொல்லத் தொடங்குகிறார் ஒரு மாலை நேர வகுப்பில் பாடம் நடத்திக்கொண்டிருந்த கு. பாலசுப்ரமணியன். அவர்தான் பள்ளியின் நிறுவனர். முப்பது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சிறிய அறையில் முளைத்த கனவு அது.
காந்திய கொள்கைகளில் ஈடுபாடுள்ள அவர், ஒரு படிப்பகத்தில் ஐந்து நண்பர்களுடன் சேர்ந்து மாலை நேர இலவச வகுப்புகளை நடத்தினார். எஸ்எஸ்எல்சியில் தோல்வியடைந்தவர்கள் மீண்டும் படிக்க டுடோரியலில் அதிகமாக பணம் கேட்பார்கள். அதோடு ஒரு பாடத்தில் தோல்வி என்றால் எல்லா பாடங்களையும் எழுதவேண்டிய நிலையும் இருந்தது. அந்த காலகட்டத்தில் ஓர் அமுதசுரபி போல கு.பாலசுப்ரமணியனின் காந்தி நற்பணிக் கழகம் செயல்படத் தொடங்கியுள்ளது. "ஆரம்பத்தில் மாதாகோயில் தெருவில் முதியோர் கல்வி வகுப்புகளை நடத்தினேன். மக்களின் ஒத்துழைப்பு இ¢¢லை. பிறகுதான் பள்ளி மாணவர்களுக்கு இலவச இந்தி வகுப்புகளை நடத்தினோம். நல்ல வரவேற்பு. அதுதான் இன்று ஒரு பள்ளியாகவே உருவெடுத்திருக்கிறது. மாலையில் 6 மணிக்கு ஆரம்பித்து 10 மணிவரை வகுப்புகள் நடக்கும். காலையில் வகுப்புகள் உண்டு" என்கிறார்.
ஜெயப்பிரகாஷ் நாராயணின் பீகார் இயக்கத்தில் ஈடுபாடு கொண்ட அவர், மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கும்போது காந்திய சிந்தனைகளை சொல்லாமல் இருப்பதில்லை. வாழ்வில் எளிமையும் சேவை மனமும் ஊழலற்ற மனநிலையும்தான் முக்கிய கல்வியாக இருக்கமுடியும் என¢று நம்புகிறார். இவர்களது பணியைப் பார்த்த பனாரஸ் மஹால் ஜவுளிக்கடை அதிபர் தாமாக முன்வந்து வகுப்பு நடத்துவதற்கான அறைக்கு வாடகைப் பணம் கொடுத்து உதவியுள்ளார். இப்படி படிப்படியாக நடந்த இலவச வகுப்புகள் பற்றிய செய்தி நகரெங்கும் பரவ கோயில் நகரில் காந்தி நற்பணிக் கழகமும் நகரின் பெருமையாக மாறியிருக்கிறது. ஒரு பெரும் பொருளாதாரப் போராட்டத்துக்குப் பிறகு தற்போது சொந்த கட்டடத்தில் இயங்குகிறது.
இங்கு நேரடியாக எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு தேர்வெழுத படிப்பவர்கள் அதிகம். நெசவாளர் குடும்பங்களில் 'சீடா' போடும் பணிக்காக குழந்தைகளைப் பயன்படுத்துவது பழக்கம். அதனால் படிப்பு பாதியில் நிறுத்தப்படும் அல்லது பள்ளிக்கே அனுப்பமாட்டார்கள். மற்றும் சிறு வயதிலேயே வேலைக்கு அனுப்படும் ஏழைக் குழந்தைகள். இவர்கள்தான் இப்பள்ளியின் இலவச வகுப்புகளின் மாணவர்கள். இந்த மாணவர்களின ஆர்வத்தை சொல்லிமாளாது என்கிறார் அங்கு வகுப்பெடுக்கும் ஆசிரியர் ஐயப்பன். ஒரு தனியார் பள்ளியில் பணிபுரியும் இவரைப் போன்ற பலரும் மாலை நேரம் வகுப்புகளை ஊதியமில்லாமல் நடத்துகிறார்கள். "நாங்களும் இங்கதான் இந்தி படிச்சோம். நம்முடைய பங்களிப்பு ஏதாவது இருக்கவேண்டும் என்று நினைத்தோம். இருபது ஆண்டுகளாக வகுப்புகளை நடத்திவருகிறோம். எதையும் எதிர்பார்த்து செய்யவில்லை. எங்களுக்கு ஆத்மதிருப்தி கிடைக்கிறது. அதுவே போதும்" என்று சொல்கிறார் பாலவெங்கட மாணிக்கம், ஒரு தனியார் பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணிபுரிகிறார்.
இந்தப் பள்ளியில் 300 மாணவ மாணவிகள் இந்தி வகுப்பில் படிக்கிறார்கள். இளம் மனங்களில் காந்திய சிந்தனையைப் பரப்புவதில் ஆர்வம் கொண்டிருக்கிறார் கு.பாலசுப்ரமணியன். தாங்கள் பணிநேரம் போக ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்கள் தன்னிச்சையாக வந்து ஊதியம் பெறாமல் வகுப்பு நடத்துகிறார்கள். தேறமாட்டான் என்ற பெயரெடுத்த இளைஞர் சுப்ரமணி. காந்தியடிகள் நற்பணிக் கழகம்தான் தன்னை ஒரு மனிதனாக உயர்த்தியது என்று பெருமிதத்துடன் தசஇயிடம் அவர் பகிர்ந்துகொண்டார். "அஆவன்னாகூட தெரியாதவனா இருந்தான். அவங்கதான் என்னை கண்ணைத் திறந்தாங்க. நேரடியாக எட்டாம் வகுப்பை முடிச்சுட்டு இந்தியில பிஏவரைக்கும் படிச்சேன். இன்னைக்கு நான் எங்க ஜவுளிக்கடையில் கணக்கு எழுதறவனா இருக்கேன். இ¢ல்லைனா துணிக்கு சாயாம் போட்டுக்கிட்டு இருந்திருப்பேன்" என்கிறார்.
காந்தியடிகள் நற்பணிக் கழகத்தில் படித்து இன்று நல்ல வேலையில் இருக்கும் பலரும் உதவி செய்கிறார்கள். புதிய கட்டடம் கட்டுவதற்காக ஒரு மாணவர் தனிப்பட்ட முறையில் 9 ஆயிரம் ரூபாய் அனுப்பியதை பெருமையுடன் சொல்கிறார்கள். ஒரு இனிப்புக் கடையில் வேலைபார்த்த வெங்கட்ராகவன் பகுதி நேரத்தில் இப்பள்ளியில் படித்து நேரடியாக எட்டாம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார். பிறகு பத்தாம் வகுப்பில் 429 மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார். பள்ளியில் சேர்ந்து பனிரெண்டாம் வகுப்பில் படித்து தேறியிருக்கிறார். "நான் படிக்கிறேன் என்பது கனவு போல இருக்கிறது. இந்த நற்பணிக் கழகத்தால் கிடைத்த பரிசு அது. பிஏ சமூகவியல் படிக்கலாம் என்றிருக்கிறேன். வீட்டிலும் ஆதரவு காட்டுகிறார்கள். எனக்கு ஐஏஎஸ் ஆகவேணடும் என்பதுதான் ஒரே இலட்சியமாக இருக்கிறது" என்கிறார் வெங்கட்ராகவன்.
கும்பகோணத்தைச் சேர்ந்த கலை விமர்சகர் தேனுகா, ''குறைந்தபட்ச நிதி ஆதாரம்கூட இல்லாமல் இயங்கும் இப்பள்ளி ஓர் அதிசயம். எங்கள் ஊருக்கே பெருமை சேர்க்கும் அடையாளமாக மாறியிருக்கிறது'' என்கிறார். மற்றப் பள்ளிகளைப் போல அல்ல. இங்கு படித்தவர்கள் வேலைக்குச் சென்ற பின்பும்கூட மாலை வகுப்புகளை நடத்த ஆர்வத்துடன் வருகிறார்கள். நன்றிக்கடன்.
Sunday, July 3, 2011
Saturday, November 13, 2010
34 - வது ஆண்டு விழா - 11-10-2009
கும்பகோணம் காந்தியடிகள் நற்பணிக் கழகத்தின் 34-வது ஆண்டு விழா, காந்தி ஜெயந்தி விழா மற்றும் ஹிந்தி மாணவர் விழா 11-10-2009 ஞாயிறு மலை கும்பகோணம் ஜனரஞ்சனி ஹாலில் நடைபெற்றது.
கழக அமைப்பாளர் திரு. கு. பாலசுப்ரமணியன் அவர்கள் விழாவிற்கு தலைமை ஏற்றார் . முனைவர் திரு. மு. ராமசாமி அவர்கள் சிறப்புரை வழைங்கினார். நகரின் அறிவிற் சிறந்த பெரியோர் பலர் வாழ்த்துரை வழங்கினர். ஏராளமான கழக மாணவர்களும், உறுப்பினர்களும், ஆசிரியர்களும், கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
காந்தியடிகள் நற்பணிக் கழகம்
காந்தியடிகள் நற்பணிக் கழகம்
34 - வது ஆண்டு விழா
காந்திஜெயந்தி விழா மற்றும்
ஹிந்தி மாணவர் விழா
நிகழ்ச்சி நிரல்
தலைமை : திரு. கு. பாலசுப்ரமணியன்,
அமைப்பாளர், காந்தியடிகள் நற்பணிக் கழகம்.
கழகப் பாடல் : செல்வி. பா. புவனேஸ்வரி, செல்வி. எஸ். சூரிய பாரதி
கழக ஆசிரியைகள்.
வரவேற்புரை : செல்வி. ல. ஸ்ரீவித்யா
கழக ஆசிரியை
ஆண்டறிக்கை: திரு மா, ராஜு
கழக ஆசியர்
சிறப்புரை: முனைவர் மு. ராமசாமி
கலைப் புலத் தலைவர் தமிழ் பல்கலைக்கழகம்
.
வாழத்துரை : முனைவர் என் . காமகோடி
செயல் இயக்குனர், கும்பகோணம் பரஸ்பர சகாய நிதி.
திரு பிஆர். பி. வேலப்பன்
நிர்வாக இயக்குனர், கும்பகோணம் பரஸ்பர சகாய நிதி
திரு எஸ். பி . இராமன்,
இயக்குனர், கும்பகோணம் பரஸ்பர சஹாய நிதி
திரு தி. மாணிக்கவாசகம், ரோட்டரி சங்கம்.
திரு த. மோகன்
திரு தேனுகா
சிறப்புரை வழங்கிய முனைவர் மு. ராமசாமி அவர்கள் நாடக கோட்பாடுகளையும் இன்றைய கல்வி முறையில் நாடகத்தின் பங்களிப்பையும், அவசியத்தையும் பற்றி பேசினார்.
.
Monday, January 4, 2010
Subscribe to:
Posts (Atom)



















